பதிவு செய்த நாள்
28
டிச
2016
11:12
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சிவலோகநாதரையும், நந்தியையும் வழிப்பட்டனர். கிணத்துக்கடவு சிலோகநாதர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் அபிேஷக பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், உற்சவ மூர்த்தி நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலகண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு வெகுவிமர்சையாக நடந்தது.