Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ... கோவிந்தா கோஷத்துடன் திண்டுக்கல் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு கோவிந்தா கோஷத்துடன் திண்டுக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
11:01

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் பத்மாஸனித்தாயார் கோயிலில் டிச., 29 முதல் பகல் பத்து உற்சவம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் சயன கோலத்திலும், பகல் 1:00 மணிக்கு விஸ்வரூப தரிசனத்திலும் அருள்பாலித்தார். இரவு 7:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகந்நாதப்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா வந்தனர். ஆழ்வார்கள் எதிர்சேவை நடந்தது. பின்னர், 7:35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஏகாதசி மண்டபம் வழியாக பெருமாள் மூன்று முறை வலம் வந்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர்.

* பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த பத்து நாட்களாக பகல் பத்து உற்சவம் நடந்தது. ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் தினமும் எழுந்தருளினார். பத்தாம் நாளான நேற்றுமுன் தினம் மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வந்தார். மாலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின், பெருமாள் வைர முடி தரித்து ராஜ அலங்காரத்துடன் ஏகாந்த சேவையில், பரமபதவாசல் வழியாக 5:00 மணிக்கு வந்தார். கோயில் பிரகாரங்களில் வலம் வந்த பெருமாள், ஆண்டாள் சந்நதியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஏகாதசி மண்டபத்தில் காலை 6 :00 மணிக்கு எழுந்தருளிய பெருமாளுக்கு, காலை 11 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இராப்பத்து உற்சவம் துவங்கியது. துவாதசி திருநாளான இன்று(ஜன.,9) காலை பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா வருகிறார்.

* பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், கருட வாகனத்தில் காட்சியளித்த ராமர், கோயிலின் வடக்கேயுள்ள சொர்க்க வாசல் வழியாக காலை 6.15 மணிக்கு அருள்பாலித்தார்.

* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் ஏகாந்த சேவையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சொர்க்கவாசல் வழியாக காலை 5:15 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar