Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜமீன் கோவிலில் மரகதலிங்கம் திருட்டு பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்யாகுமரியின் இசை ஆராதனை
எழுத்தின் அளவு:
கன்யாகுமரியின் இசை ஆராதனை

பதிவு செய்த நாள்

10 ஜன
2017
11:01

மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜத்தின் 65 வது ஆண்டு இசை விழா நடந்தது.நேற்று கன்யாகுமரி குழுவினரின் வயலின் இன்னிசை கச்சேரி நடந்தது. எல்.ராமகிருஷ்ணன் மற்றும் சாய் ரக் ஷீத் இணைந்து வயலின் இசைத்தனர். தொடக்கமாக ஆதிதாளத்தில் அமைந்த நாட்டக்குறிஞ்சி வர்ணம் சுநாதமாக இருக்க தொடர்ந்து வந்த வினாயகர் துதி அம்சத்தொனி ராகத்தில் விறுவிறுப்பாக கச்சேரியை களைகட்டச் செய்தது. தொடர்ந்து தியாகராஜர் சீத்தாதேவியை புகழ்ந்து பாடிய சிந்து கன்னட ராக கீர்த்தனை நன்னு கன்ன தல்லி என துவங்கும் பாடல் ஆதி தாளத்தில் இசை மணம் பரப்பியது. தொடர்ந்து கனராக பஞ்சரத்தின கீர்த்தனை ஜெகதாநந்த தாரக என துவங்கும் நாட்டை ராக பஞ்சரத்தினம் இசை ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தது.தொடர்ந்து மிகஅபூர்வமாக கச்சேரிகளில் வாசிக்கப்படும் முத்துசுவாமி தீட்சிதரின் 14 ராகங்களை கொண்ட ராகமாலிகா இசை விழாவில் பெரும் விருந்தாக அமைந்தது. அடுத்ததாக திருப்பதி எழுமலையானின் ஏழு மலைக்கும் ஒவ்வொரு புதிய ராகத்தை கண்டுபிடித்து கன்யாகுமரி வாசித்து வருகிறார். அதில் அன்னமாச்சாரியார் இயற்றிய நேருநேது என தொடங்கும் நாராயணயதி என்ற புதிய ராகபாடல் கச்சேரியில் தரம்உயர்த்தி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தவில் வாசித்த கே.சேகர் மற்றும் கஞ்சிரா வாசித்தஅனிருத் ஆத்ரேயா இருவரும் இணைந்து கன்னியாகுமரியின் இசைக்கு இணையாக தாளவேள்வியை நடத்தினர். அடுத்ததாக கச்சேரியை தியாகராஜர் ஆராதனையாக மாற்றிய நவரச கன்னட ராகத்தில் அமைந்த நின்னுவினா என்ற கீர்த்தனை பக்தியுடன் விளங்கியது. இன்று மாலை சஞ்சய் சுப்பிரமணியன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar