Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை பெரியாயி அம்மனுக்கு ... தீபாய்ந்த அம்மன் கோவிலில் 10 கிராமத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு தீபாய்ந்த அம்மன் கோவிலில் 10 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை பொறந்தாச்சு... வழிகாட்டு கோவிந்தா!
எழுத்தின் அளவு:
தை பொறந்தாச்சு... வழிகாட்டு கோவிந்தா!

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
12:01

ஆர்.கே.பேட்டை : தை பிறந்ததும் முதல் கடமையாக, நாராயண பெருமாளை வணங்கி அருளை பெற, திரளான பக்தர்கள் அதிகாலையில் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். உழைப்பின் சிறப்பை கொண்டாடும் தொழிலாளர்கள், தை திங்கள் முதல் நாளில், தங்களில் இஷ்ட தெய்வத்தை வணங்கி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவிலில், பக்தர்களின் வருகையை ஒட்டி, கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்படுகளை செய்திருந்தது. நேற்று முன்தினம், தை பொங்கல் திருநாளில், அதிகாலை 3:00 மணிக்கு, சுவாமிக்கு சுப்ரபாத சேவையுடன் சிறப்பு வழிபாடு துவங்கியது. 4:30 மணி முதல், காலை 11:00 மணி வரை, சுவாமி தரிசனம் நடந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில், தை பொங்கல் நாளில் முதல் கடமையாக, சுவாமியை தரிசனம் செய்து, தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற கோரி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். துளசி மாலை அலங்காரத்தில், மூலவர் அருள்பாலித்தார். உற்சவர் மற்றும் அஷ்டலட்சுமி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. வங்கனுார், சிங்கசமுத்திரம், சஞ்சீவிபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், அம்மையார்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலிலும், சிறப்பு தரிசனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar