Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலழகிய பெருமாள் கோயிலை கட்டிய அரச ... வேம்பாரில் புனித அந்தோணியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் ஐந்து கருடசேவை விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2011
11:10

தூத்துக்குடி : தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நேற்றுமுன்தினம் ஐந்து கருடசேவை பெருவிழா விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய அம்சமாக புரட்டாசி கடைசி சனிக்கிழமை விழா ஐந்து கருடசேவை விழாவாக நடந்தது.நேற்றுமுன்தினம் காலை கோபூஜையுடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து சுப்ரபாதபாராயணம், பல்லாண்டு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவித்தல், இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து வைகுண்டபதி பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக பெருமாள் கற்கள் அடங்கிய நகைகளால் அற்புதமாக ஜொலித்தார். திருப்பதிக்கு சென்று வந்த திருப்தி தூத்துக்குடியில் கிடைத்ததாக பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். காலையில் இருந்தே வைகுண்டபதி பெருமாளை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் சிறப்பான முறையில் வழிபட வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்தபெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெருமாளை தரிசித்த பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயரை தரிசித்தனர். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் பாலாஜி செய்தார். இரவு ஐந்து கருட சேவை விழா நடந்தது. வைகுண்டபதி பெருமாள், ரெங்கநாதபெருமாள், வரதராஜபெருமாள், ஆதிஜெகநாதபெருமாள், வெங்கடாஜலபதி பெருமாள் ஆகிய ஐந்து அவதாரங்களில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயிலில் இருந்து யானை, தாரை, தப்பட்டங்கள், 24 பேர் கொண்ட கேரள செண்டைமேளம், 5 செட் மங்களவாத்தியம், 30 பேர் கொண்ட நாதஸ்வர குழுவினர் முன் செல்ல ஐந்து பெருமாளும் ரதவீதிகளில் உலா வருதல் நடந்தது. விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை போன்ற பிரசாதங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. தனித்தனியாக ஐந்த பெருமாளுக்கும் தொடர்ச்சியாக பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
ஜம்மு: புனித அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் முதல் குழு புறப்பட்டு சென்றது. பயங்கரவாதிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar