பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின், வெள்ளி கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, எஸ்.வி., ரோடு, கடைவீதி, வெளிபேட்டை தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், நெசவாளர்காலனி சக்தி விநாயகர் கோவில், தொழில்மையம் விநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது.