Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைகோவிலில் மண் உருவ வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாட்டு பொங்கல் நாளில் யானையை கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
02:01

சேலம்: மாட்டு பொங்கல் நாளில், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் யானையை, நிர்வாகம் கண்டுகொள்ளாததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில், மடங்களில் உள்ள, 29 யானைகள், வனத்துறை பராமரிப்பில் உள்ள, 18 யானைகளுக்கு, கோவில் நிர்வாகம், வனத்துறை சார்பில், பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடத்தியதோடு, பொங்கல், பழம், கரும்பு ஆகியவை சாப்பிட வழங்கப்பட்டன. ஆனால், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரியை, கோவில் நிர்வாகம், பொது நல அமைப்புகள் கண்டுகொள்ளவில்லை. அந்த யானை, காசநோயால் பாதிக்கப்பட்டு, கோவிலுக்கு சொந்தமான கோரிமேட்டில் உள்ள இடத்தில் பராமரிக்கப்படுகிறது. அங்கு சென்று, ஆறு மாதங்களான நிலையில், யானைக்கு தேவையான உணவுகள், குறிப்பிட்ட நேரத்தில் செல்லாத காரணத்தால், அதன் உடல் நிலை, பாதிப்புக்குள்ளாகி வருகிறது. வழக்கமாக, மாட்டு பொங்கல் நாளில், யானையை குளிப்பாட்டி, திருநீர், பொட்டு மட்டுமின்றி, சிறப்பு ஆடை அணிவித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கும். நேற்று, ராஜேஸ்வரியை பாகன் குளிப்பாட்டிய நிலையில், திருநீர், சந்தனம், சிறப்பு ஆடை அணிவிக்கப்படவில்லை.

சேலம் மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சந்தோஷ்குமார் கூறியதாவது: யானை ராஜேஸ்வரியை, சுடுகாடு அருகே வைத்து பராமரிக்கும் கோவில் நிர்வாகம், அதற்கு முறையான சிகிச்சை, உணவு வழங்கவில்லை என, புகார் வருகிறது. அதுமட்டுமின்றி, மாட்டு பொங்கல் நாளில், அதற்கான சிறப்பு பூஜையை கைவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ராஜேஸ்வரியின் உடல் நிலையில் அக்கறை இல்லாத, கோவில் நிர்வாகத்தை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar