திருச்சியைச் சேர்ந்த மணிசாஸ்திரி என்பவர், பெரியவரைத் தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். காதில் கடுக்கண், கையில் பிரஸ்லெட், விரல்களில் மோதிரம் என்று பணக்கார தோரணையுடன் காட்சியளித்தார். பெரியவர் சாஸ்திரியிடம், “வைதீகம் எல்லாம் எப்படி இருக்கு? வருமானம் வருகிறதா?” என்று கேட்டார். “பெரியவா அனுக்கிரஹத்தில் வைதீகம் சிறப்பா இருக்கு. எதிர்பார்க்கும் தட்சணையை (சன்மானம்) விட கர்த்தாக்கள் (ஹோமம் நடத்துபவர்கள்) அதிகமாகவே தர்றாங்க” என்று பதிலளித்தார். பெரியவர் மணிசாஸ்திரியிடம், “நீ மற்றவர்களைக் கசக்கிப் பிழிந்து சன்மானம் வாங்குறதா கேள்விப்பட்டேன். உன்னைப் பார்த்தாலே படாடோபம் தெரியுது. வேதத்தை வியாபாரமாக்காதே. வருமானத்தில கொஞ்சம் வேதபாடசாலை செலவுக்கு கொடு. அது உன் சந்ததியைக் காப்பாற்றும்,” என்று அறிவுரை கூறினார். அந்த நிமிடம் முதல் மணி சாஸ்திரி, நகைஅணியவோ, சன்மானம் அதிகம் பெறவோ மாட்டேன் என்று சபதம் செய்தார். பெரியவரும் மகிழ்ந்து ஆசி வழங்கினார். (மகான் காஞ்சிப் பெரியவர்)