ராஜபாளையம்: கோவையில் ஈசா மையம் சார்பில் பிரதிஷ்டை செய்ய உள்ள சிவன் திருஉருவம் கொண்ட ரத ஊர்வலம் ராஜபாளையம் வந்தது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் ஈசா யோகா மையம் சார்பில் யோகாவை அருளிய ஆதியோகி சிவனுக்கு 112 அடி உயரத்தில் சிவன் திருமுகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி மகாசிவராத்திரியான பிப். 24ல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சிவனின் திருமுகம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பொது மக்கள் வணங்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் ராஜபாளையம் வர, அங்குள்ள மாயூரநாத சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிவழியாக ஜவஹர் மைதானம் பகுதியை அடைந்தது. ஈசா மையத்தின் சார்பில் பக்தர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பூஜை செய்து பொது மக்களுக்கு திருநீர் வழங்கினர்.