Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் ... மாமல்லபுரத்தில் களைகட்டியது காணும் பொங்கல் மாமல்லபுரத்தில் களைகட்டியது காணும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகதளாவில் ஹெத்தை பண்டிகை நிறைவு
எழுத்தின் அளவு:
ஜெகதளாவில் ஹெத்தை பண்டிகை நிறைவு

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
12:01

ஊட்டி: குன்னுார் அருவங்காடு அருகே உள்ள, ஜெகதளாவில், ஹெத்தை பண்டிகை நிறைவு பெற்றது. நீலகிரியில், வாழும் படுகர் இன மக்கள், ஹெத்தையம்மன் பண்டிகையை, ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி வருகின்றனர். இதில், பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னூர், எப்பநாடு, கேத்தி, பந்துமை, உயிலட்டி, நெடுகுளா, பெப்பேன், கூக்கல் ஆகிய, 14 கிராமங்களில் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக நடந்து வந்தது. இதில், ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய, 8 கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களில், ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர். கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர்.

தொடர்ந்து, காரக்கொரை மடிமனையில் நடந்த பூகுண்டம் திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், ஜெகதளாவில் நேற்று நடந்த நிறைவு நாள் விழா, எளிமையாக கொண்டாடப்பட்டது. ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இப்பண்டிகை நடப்பாண்டு எளிமையாக நடத்தப்பட்டது இது குறித்து, கிராம மக்கள் கூறுகையில், வறட்சி மாவட்டமாக, நீலகிரி அறிவிக்கப்படாத நிலையில், தண்ணீர் இல்லை; பண பிரச்னை ஆகிய காரணங்களால் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது என்றார். இதனால், குறைவான அளவிலான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar