பதிவு செய்த நாள்
18
ஜன
2017
11:01
நகரி: காணும் பொங்கல் திருவிழாவையொட்டி, நடந்த பார் வேட்டை விழாவில், 24 உற்சவர் சுவாமிகள் சந்திப்பு நகரியில் நடந்தது.
சித்துார் மாவட்டம், நகரி மண்டபம் அருகே எழுந்தருளியுள்ள வழிதுணை விநாயகர் கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் பண்டிகையை யொட்டி, மலைச்சுற்று விழா மற்றும் பார்வேட்டை உற்சவம் நடைபெறும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த விழாவில், உற்சவர்கள் நாராயணவனம் கல்யாண வெ ங்கடேச பெருமாள், கரிம்பேடு நாததீஸ்வரர்,நகரி அகத்தீஸ்வரர், கரகண்டேஸ்வரர், தேசூர் அகரம் வேணுகோபாலசுவாமி, கிருஷ்ணாராமாபுரம் கைலாசநாதர், சத்திரவாடா சிதம்பரேஸ்வரர், பாலமங்கலம் வாலீஸ்வரர், கம்பரபாளையம், மீனாட்சியம்மன், தும்பூர், தும்பூஸ்வரர் உட்பட, 24 பகுதிகளில் இருந்து, 24 உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும், சந்திப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேங்காய் உடை த்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். விழாவில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.