பள்ளூர்: பள்ளூர் கிராமத்தில், கொள்ளு மோட்டம்மன் திருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த பள்ளூர் கிராமத்தில் ஆண்டுதோறும் கொள்ளு மோட்டம்மன் திருவிழா நடப்பது வழக்கம். நேற்றும் இந்த திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. கொள்ளு மோட்டம்மன் கோவிலில் இருந்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், மேள தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வீதியுலா துவங்கியது. அலகு குத்திய பக்தர்கள் டிராக்டர், கனரக வாகனங்களில் தொங்கிய படி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த விழாவை முன்னிட்டு, கிராமம் முழுவம் விழாக்கோலம் பூண்டிருந்தது.