Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளிங்கிரி மலையில் தை அமாவாசை ... அய்யாவாடியில் தை அமாவாசை நிகும்பலா யாகம் அய்யாவாடியில் தை அமாவாசை நிகும்பலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் தை அமாவாசை விழா: மலையில் குவிந்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
04:01

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் தை அமாவாசை விழா விமரிசையாக நடந்தது. இதனை காண தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் மலையில் குவிந்தனர்.

Default Image
Next News

தமிழகத்தின் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில் இரண்டாவது பெரிய திருவிழாவாக தை அமாவாசை திருவிழா கொண்டாடப்படும். இங்குள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்களில் இந்த ஆண்டு தை அமாவாசை விழா ஜன.25 ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. அன்று முதல் பக்தர்கள் தொடர்ந்து மலைக்கு சென்று வந்தனர். 3 ம் நாளான, முக்கிய நிகழ்வான அமாவாசை பூஜைகள் விமரிசையாக நடந்தன. சுவாமிகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்களும், சங்கொலி முழங்க சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதனை தொடர்ந்து சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கசுவாமி ராஜஅலங்காரத்திலும், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்பகிரீட அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் தாணிப்பாறை கருப்பசாமி கோயிலில் வழிபாடு செய்தனர்.

மலை அடிவாரத்தில் உள்ள வயல், தோப்புகளில் ஏராளமான பக்தர்கள் முகாமிட்டு சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபட்டனர். மதுரை, தேனி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துõர், ராஜபாளையம் உட்பட பல்வேறு நகரங்களிலிருந்தும் மலையடிவாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மலையிலும், மலைப்பாதைகளிலும் பேரையூர் டி.எஸ்.பி., சார்லஸ் தலைமையில் மதுரை மாவட்ட போலீசாரும், அடிவாரம், தாணிப்பாறை பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்துõர் டி.எஸ்.பி., சின்னையா தலைமையில் விருதுநகர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி உட்பட அறநிலையத்துறையினர் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar