Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக ... கதித்தமலை வெற்றிவேலாயுதசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமாயண காட்சி கூடம் பார்க்க 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2017
12:02

நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ராமாயண காட்சி கூடத்தை பார்வையிட, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மூன்று ஏக்கரில் 25 கோடி ரூபாய் செலவில் ராமாயண காட்சி கூடம் மற்றும் பாரதமாதா கோயில் நிறுவப்பட்டுள்ளது. சித்திர கண்காட்சி கூடத்தின் முன்புறம் 27 அடி உயரத்தில் 12 அரை டன் எடை கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் மேல்தளத்தில் பாரத மாதா கோயில் உள்ளது. இங்கு 15 அடி உயரத்தில் ஐந்தரை டன் எடை கொண்ட வெண்கல சிலை உள்ளது. கோயிலின் உட்புறத்தில் 18 அடி நீளம் 12 அடி அகலத்தில் ராமர் பட்டாபிஷேகம், ராமேஸ்வரத்தில் ராமர் சீதை ஆகியோர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தல், பத்மனாப சுவாமியின் அனந்த சயன நிலை ஆகிய மூன்று பெரிய ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடராஜரின் நடன கோல சிலை, குமரி பகவதி அம்மனின் தவக்கோல சிலை, விவேகானந்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.கீழ்தளத்தில் ராமாயணத்தின் 108 முக்கிய சம்பவங்கள் 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கோயிலின் முன்பகுதியில் நீரூற்றுடன் கூடிய பூங்காவும், அதன் நடுவில் 32 அடி உயர சிவபெருமான் சிலையும், சிவன் தலையில் இருந்து கங்கை நதி பாய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல்வேறு பறவை, விலங்குகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த கூடத்தை கடந்த 28-ம் தேதி மாதா அமிர்தானந்தமயி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். தற்போது இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ரூ.50 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் வாங்குபவர்கள் கேந்திராவில் உள்ள இதர கண்காட்சிகளையும் பார்க்க முடியும். காலை 9:00- மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00- இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar