Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தி.மலை அருணாச்சலேஸ்வரர் ... ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காக 108 பசுவுக்கு கோ பூஜை ராமேஸ்வரத்தில் உலக நன்மைக்காக 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் த்தில் நிலைத் தெப்பம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் த்தில் நிலைத் தெப்பம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2017
11:02

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நேற்று நிலைத் தெப்பமாக நிறுத்தப்பட்டு விழா நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஜன. 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நேற்று நடந்தது.

ஜி.எஸ்.டி., ரோடு அருகேயுள்ள தெப்பக்குள கரையின் ஒரு பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மழை இல்லாத காலங்களில் அந்த ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும். தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்படும் மிதவை தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலையில் மூன்று சுற்றுகளும், இரவு மைய மண்டபத்தில் சுவாமி ஊஞ்சலாட்டம் முடிந்து மூன்று சுற்றுக்களும் சுற்றிவருவர்.இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து விட்டது. இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்காக 20 நாட்களுக்கும் மேலாக ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் விடப்பட்டது. ஆனால் குளத்தில் இரண்டு அடி மட்டுமே தண்ணீர் நிரம்ப முடிந்தது. மிதவை தெப்பம் சுற்றிவர இயலாத நிலையால், இந்த ஆண்டு நிலைத் தெப்பமாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு பூஜைகள் முடிந்து, இரவு 7:00 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி, சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி முடிந்து சுவாமி சேர்த்தி சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar