குளித்தலை: குளித்தலை அடுத்த, கடம்பர்கோவில் தைப்பூச திருவிழா முன்னிட்டு, ஆண்டுதோறும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, எட்டு கிராம கோவில்களின் சுவாமிகள் அழைத்து வரப்பட்டு, கோலாகலமாக திருவிழா நடக்கும். இந்தாண்டு நடக்கவுள்ள திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, நேற்று, கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். பக்தர்கள் வந்து செல்வதற்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், மாவட்ட திட்ட இயக்குனர் கோமகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.