இப்போது தகுதியற்றவர்களை எல்லாம், பணம் பதவிக்காக புகழ்ந்து பேசுகிறார்கள். நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேட்டால், இனிமேல் இப்படி நடக்காது என்று நம்பலாம். ஒருமுறை நாயகம் பள்ளிவாசலில் தொழும் முன்பு, ஒளு (கை, கால், உடலை கழுவுதல்) செய்து கொண்டிருந்தார். அவரது கையில் இருந்து வழிந்த நீரை, சில தோழர்கள் பிடித்து தங்கள் உடலை கழுவிக் கொண்டனர். அவர்களிடம் நாயகம் சற்று கடுமையாக, “ஏன் இப்படி செய்தீர்கள்?” என கேட்டார். அதற்கு அந்த தோழர்கள், “இறைவனின் துõதராகிய உங்கள் மீது நாங்கள் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தோம்,” என்றனர். நாயகம் இதற்காக அவர்களைக் கண்டித்தார்கள். “அருமைத் தோழர்களே! உங்கள் அன்பைக் காட்டும் வழி இதுவல்ல! என்னை மனப்பூர்வமாக நீங்கள் நேசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையிலே என்னைப் பின்பற்றுங்கள். நான் எதைச் செய்கிறேனோ அதைச் செய்யுங்கள். எதை நான் விலக்கி விடுகின்றேனோ அதை நீங்களும் விலக்கி விடுங்கள். என் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அவ்வாறே நடந்து காட்டுங்கள். அதைவிடுத்து என்னை வெளிப்படையாக போற்றி புகழ்ந்துவிட்டு, உங்கள் வாழ்க்கையிலே என்னை முன்மாதிரியாகக் கொண்டு நடக்காத யாரும் உறுதியாக என்னைப் பின்பற்றியவராக மாட்டீர்கள். இதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். புகழனைத்தும் இறைவனுக்கே! மனிதனுக்கு அல்ல,” என்றார். “உங்களில் எவரேனும் முகஸ்துதி (புகழ்ந்தால்) செய்வதைக் கண்டால் அவர்களின் முகங்களில் மண்ணை வாரி அடியுங்கள்,” என்று கடுமையாகச் சொல்கிறார் நாயகம்.