பதிவு செய்த நாள்
01
மார்
2017
01:03
திருவொற்றியூர் : திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், மஹா சிவராத்திரி விழாவிற்கு, ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவில், மஹா சிவராத்திரியை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு முதல், திருவொற்றீஸ்வரருக்கு, நான்கு கால பூஜைகள் நடந்தன. அதில், சுவாமிக்கு சந்தனாதி தைலம், பஞ்சாமிர்தம், பன்னீர், பால், தயிர், இளநீர், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டன. நள்ளிரவு ஆதிபுரீஸ்வருக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில், ஆன்மிக குழுக்கள் சார்பில், ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவு நடந்தன. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. வரும் மாசி பிரம்மோற்சவத்திற்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.