பதிவு செய்த நாள்
01
மார்
2017
01:03
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி, முருகன் கோவிலின் உபகோவிலான மத்துார் கிராமத்தில் உள்ள, மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், பிற்பகல், 3:00 மணி முதல் மாலை, 4:30 வரை ராகுகால பூஜை நடந்தது. காலை முதல் மாலை வரை, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார், பொன்பாடி, புச்சிரெட்டிப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.