Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீமாத்தம்மன் கோவிலில் ... அங்காளம்மன் கோவிலில் தீ மிதி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமாரியம்மன் கோவில் இடித்து அகற்றம்! - கோர்ட் உத்தரவு; மக்கள் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2017
12:03

குறிச்சி : போத்தனுார் - செட்டிபாளையம் ரோட்டில், ஈஸ்வர் நகர் பஸ் ஸ்டாப் அருகே, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கருமாரியம்மன் கோவில், இடித்து அகற்றப்பட்டது. போத்தனுார் - செட்டிபாளையம் ரோட்டில், ஈஸ்வர் நகர் பஸ் ஸ்டாப் அருகே, சுப்பையன் என்பவரது இடம் உள்ளது. இவ்விடத்தின் முன், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தனக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையூறாக உள்ளதாகக் கூறி, சுப்பையன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், கோவிலை இடித்து, அகற்ற நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு கோவிலை நிர்வகித்து வந்த வெங்கடாசலம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில், தடையுத்தரவு பெறப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில், கோவிலை இடிக்க சுப்பையன் உத்தரவு பெற்றார். அதையடுத்து நேற்று காலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் ராஜா ஆகியோர் கோவிலை இடித்து அகற்ற வந்தனர். உதவி கமிஷனர் அனிதா மேற்பார்வையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள், கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தனர். போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம், கோவில் இடிக்கப்பட்டது. அம்மன் சிலை உள்ளிட்டவை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரபரப்பு காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar