Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி படவேட்டம்மன் கோவிலில் ... மதுரை இஸ்கான் கோயிலில் கௌரபூர்ணிமா விழா கோலாகலம் மதுரை இஸ்கான் கோயிலில் கௌரபூர்ணிமா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் தகிக்கிறது வெயில் தவிக்கின்றனர் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில்களில் தகிக்கிறது வெயில் தவிக்கின்றனர் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

14 மார்
2017
11:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோவில்களில், வெயில் காலத்தில் பக்தர்கள் நடந்து சென்று, சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.பெரும்பாலான கோவில்களில் காலை, 5:30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 7:00 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் வருகிறது. கோடைக்காலம் துவங்கி விட்டதால், பகல், 11:00 மணிக்கு மேல், மாலை, 5:00 மணி வரை, வெயில் கொளுத்துகிறது. இதனால், கோவில் வளாகத்தில், தரையில் நடக்க முடியாமல், ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், நடப்பதற்கு, முதியோர், சிறுவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோவில்களின் பாரம்பரியம் மாறாமல் இருப்பதற்காக, தரையில் கல் பதிக்கப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிமென்ட் தரை உள்ளது.இந்த கோவில்களில் மதியம் பக்தர்கள் நிதானமாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கோடைக்காலங்களில் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்துவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்கள் செல்ல, ரப்பர் விரிப்பு போடப்பட்டுள்ளது; அதிலும் நடக்க முடியவில்லை. ஏகாம்பரநாதர் கோவிலில், கடந்த ஆண்டு நிழல் கூரை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு, அதே வசதி ஏற்படுத்த வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது போல, கைலாசநாதர் கோவிலின் வெளிப்பகுதியில் செங்கல், உள்பகுதியில் கல் தரை உள்ளது.இங்கு பெரும்பாலும் பிற மாநில சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினரும் அதிகம் வருவர். அவர்கள் கோவிலின் அழகை பார்த்து ரசித்து, வெளியே வரும் போது சிரமப்படுகின்றனர். காமாட்சி அம்மன், கச்சபேஸ்வரர் கோவிலிலும் கல் தரை உள்ளதால், பக்தர்கள் வெளிபிரகாரம் சுற்றி வர முடியாமல், தவிக்கும் நிலை உள்ளது.தற்போது நடைபாதை கல்லில், ரசாயன கலவையுடன் கூடிய வண்ணம் பூசினால், அதில் நடக்கும் போது வெப்பம் தெரியாது. அந்த மாதிரி வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar