மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் வாழ்ந்த முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர் ஆகிய தமிழிசை மூவர்களை போற்றும் வகையில் மூவருக்கும் மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆணி மாதம் மூலநட்சத்திரத்தில் தமிழிசை மூவர் விழா தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை மண்டல கலை பண்பாட்டு மைய ம், தென்னக பண்பாட்டு மையம் மற்றும் நாகை மாவட்ட கலை மன்றம் சார்பில் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படவில்லை. இவ்வாண்டு 8 மாதங்கள் காலம் தாழ்ந்து நேற்று தமிழிசை மூவர் விழா தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவை இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து, தமிழிசை மூவரின் உருவப்படங்களை திறந்து வைத்து பேசினார். விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, எம்எல்ஏ.பாரதி, மயிலாடுதுறை ஆர் டிஒ. சுபாநந்தினி, கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து புஷ்கலா ரமேஷ் குழுவினரின் நடன நிகழிச்சியும், சென் னை மாம்பலம் சகோதரிகளின் பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக தமிழிசை மூவரின் பட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான இசைப்பள்ளி மாணவர்களின் கலந்து கொண்டு இசையஞ்சலி செலுத்தினர்.