கலி புருஷன் என்பது யுக தேவதை. பொதுவாக, க்ருத யுக தேவதை, த்ரேதா யுக தேவதை, துவாபர யுக தேவதை என்று யுகங்களுக்கான தேவதைகளாக சாஸ்திரம் சொல்கிறது. அதில் கலியுக தேவதையின் ஒரு அவதாரம்தான் மகாபாரதத்தில் துரியோதனன் என்று சொல்லப்படுகிறது. பின்பு அந்தக் கலி புருஷனே பஞ்ச பாண்டவர்களின் பேரனான பரீட்சித்து மகாராஜாவால் கட்டுப்படுத்தப் பட்டான். கண்டிக்கப்பட்டான் என்றும் பாகவத புராணம் சொல்கிறது. கலி புருஷன் என்றால் கலி யுகத்தின் தேவதை. அவனது அடையாளம் கன்னங்கரேல் என்ற கறுப்பு நிறம். மறைமுகமாகச் சொல்ல வேண்டுமென்றால், கலி புருஷன் என்பது சனி பகவானைக் குறிக்கும் என்றும் சில புராணங்கள் சொல்கின்றன.