பதிவு செய்த நாள்
30
மார்
2017
01:03
துாத்துக்குடி, துாத்துக்குடி மாவட்டம் நவ திருப்பதி கோயில்களில் முதல் கோயிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் தாமிரபரணி நதியின் கரையோரத்தில் பெருமாளுக்குரிய நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் முதலாவது கோவயிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஹேமலம்ப வருஷ பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நேற்று இரவில் நடைபெற்றது. முன்னதாக காலை 7மணிக்கு விஸ்வரூபம், 8மணிக்கு திருமஞ்சனமும், புதிய வஸ்திரம் சாத்துதலும், 10.30மணிக்கு நாலாயிரதிவ்ய பிரபந்த கோஷ்டியும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்குதலும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5மணிக்கு தாயார்கள் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் உற்சவர் கள்ளபிரான்சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சயனக்குறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பஞ்சாங்கம் வாசித்தல்: மாலை 6.45மணியளவில் திருவாராதனமும், ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி ஹேமலம்பவருஷ பஞ்சாங்கம் வாசித்தலும் நடைபெற்றது. இதில், தக்கார் விஸ்வநாத், நிர்வாக அதிகாரி கார்த்திக், ஆய்வாளர் ரவீந்திரன், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், கண்ணன், ஸ்ரீனிவாசன், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் ஸ்தலத்தார்கள் செய்திருந்தனர்.