நம் கண்முன்னால் எத்தனையோ தவறுகள் நடக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவது நம் கடமை. அதே நேரம், தவறு செய்வோரைத் திருத்தும்போது, அவர்களால் நமக்கு ஆபத்து வரலாம். எனவே சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து, தவறு செய்பவர்களைத் திருத்தலாம் என்கிறார் நபிகள்நாயகம். “உங்களில் யாராவது ஒருவர் ஒரு தவறைக் கண்டால் அதைத் தமது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் வெறுத்து விலகி விடட்டும்,” என்கிறார். தவறு செய்வதை நம் கரத்தால் தடுத்து நிறுத்தும் போது எதிராளி நம்மிடம் சண்டை போடலாம். அப்படி முடியாத பட்சத்தில், அவரைக் கண்டித்தோ, புத்திமதி சொல்லியோ திருத்த முயற்சிக்கலாம். இது முடியாவிட்டால், தவறு செய்யும் நபருடன் எந்த உறவும் கூடாது என்று விலகி விடலாம்.