அமெரிக்க அறிஞர் ஹியூஜ் மூர்ஹெட், உலகத்தின் தலைசிறந்த அறிவாளிகள் 250 பேரைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அர்த்தம் என்ன? என்று கேட்டார். அந்த அறிவு ஜீவிகள் ஆளுக்கொரு கருத்தைக் கூறினர். அவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிட்டார். அவர்கள் சொன்னது எல்லாமே வெறும் யூகங்களாகவும், தற்பெருமை கொண்டதாகவும் அமைந்திருந்தன. ஒருவர் கூட கடவுளின் சித்தப்படி நமது வாழ்வு அமைந்திருக்கிறது என சொல்லவில்லை. மூர்ஹெட் தனது நுாலில், சிருஷ்டிப்பின் நோக்கம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் நாம் தாயின் கருவில் உருவாகும் முன்பே தேவனுடைய சிந்தையில் இருந்தோம் என்பது உறுதியான விஷயம், என்று எழுதியியிருந்தார். “நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்,” என்று இயேசு சொன்னார். இதிலிருந்து ஆண்டவரே நம்மை வழி நடத்த முடியும் என்பது உறுதிப்படுகிறது.