Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜராஜ சோழன் சதய விழா துவங்கியது! பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ மதிப்பீடு குழு தலைவரை மாற்றலாமா? பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெப்பக்குளத்தை நிரப்ப தலா ஒரு குடம் நீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2011
10:11

மதுரை:""மதுரை தெப்பக்குளத்தில் சுப காரியங்களின் போது, பொதுமக்கள் தலா ஒரு குடம் நீர் ஊற்றுவதை வாடிக்கையாக மாற்றலாம். இதனால் சாக்கடை நீர் நிரம்புவதை தவிர்க்கலாம், என மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,நன்மாறன் கூறினார்.அவர் கூறியதாவது: மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட தெப்பக்குளம் மதுரைக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு காலத்தில், அருகிலுள்ள மக்கள் தெப்பக்குள நீரை சமையல் மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். அதிக குழந்தைகளை பாதுகாத்த அன்னை இன்று, முதுமை நிலையில் அயர்ந்து இருப்பதைப்போல் நீரற்று கிடக்கிறது. குளத்தால் பயனடைந்த மக்கள், இதை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளனர். தற்போது, தெப்பத் திருவிழாவின் போது தான் இது கவனிக்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் நீர் நிரப்புவது என்ற முடிவால், ஓரளவு நல்ல தண்ணீர், கழிவு நீர் கலந்து விடப்படுகிறது. நான் எம்.எல்.ஏ.,வாக ஆனபோதுவரை இது நீடித்தது. தேரை வடம் பிடித்து இழுக்கும் மக்கள் துர்நாற்றத்தை சகிக்க முடியாமல் ஒரு கையால் வடம், ஒரு கையால் மூக்கை பிடித்துக்கொண்டு பணியை நிறைவேற்றினர். நான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.வைகையை நம்பி இக்குளம் உள்ளது. வைகையிலிருந்து தண்ணீர் வந்த பாதை அடைபட்டுள்ளது. வைகை ஆறு மிக தாழ்வாகவும், தெப்பக்குளம் மேடாகவும் உள்ளதால் சீராக நீர் வரவில்லை என அரசு விளக்கம் அளித்தது. தண்ணீர் நிரப்புவதில், மக்களின் சுய முயற்சி தேவை. உண்டியலில் பணம்போடுவதுபோல், தெப்பக்குளத்தில் தலா ஒரு குடம் நீர் ஊற்றலாம். இதனால், தெப்பக்குளம் நிறையுமா என அறிஞர்கள் வினவலாம். சிறுதுளி பெருவெள்ளம்.தெப்பக்குளத்தைச் சுற்றி பள்ளிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. சுப காரியங்களின் போது, பொதுமக்கள் தலா ஒரு குடம் நீர் ஊற்றுவதை வாடிக்கையாக மாற்றலாம். இதனால் சாக்கடை நீர் நிரம்புவதை தவிர்க்கலாம். ஜாதி, மத வேறுபாடின்றி இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.விளக்குத்தூண் பகுதியில் வீணாகும் மழை நீரை, தெப்பக்குளம் நோக்கி திருப்ப வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆவணி ... மேலும்
 
temple news
திருப்பதி; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி கோயிலில் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் ஆதின மடத்தில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் ஏழாம் ஆண்டு ... மேலும்
 
temple news
பித்ருக்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்: தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar