சங்ககிரி, கோட்டைத்தெருவில் அழகுமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 4ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. எட்டாம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி, பூங்கரகம் எடுத்து, வந்தனர். மேலும் சிலர் காளிவேடம் அணிந்து, சங்ககிரி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று காலை பொங்கல் விழா நடக்கிறது.