தமிழ் புத்தாண்டில்.. பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2017 11:04
பழநி, : தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 4:00 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநியில் மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்களில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்தனர். பழநி மலைக்கோயில் படிப்பாதையில் திருமுருகபக்த சபா சார்பில் அதிகாலை 5:00 மணிக்கு படிபூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடங்கள், தீர்த்தக்காவடி எடுத்து வெளிப்பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2:00 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். பொதுதரிசனம் வழியில் 4:00 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.