பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
12:04
திருத்தணி:திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, வரும், 20ம் தேதி அதிகாலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம், 7ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறுகிறது.திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள புராதன திரவுபதியம்மன் கோவிலில். இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா வரும், 20ம் தேதி, அதிகாலை, 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பும், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.
தினமும், மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை நடைபெறுகிறது. வரும், 24ம் தேதி முதல், மே மாதம், 7ம் தேதி வரை இரவு, 10:00 மணிக்கு, மகாபாரத நாடகம் நடை
பெறும். வரும், 26ம் தேதி, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 28ம் தேதி, சுபத்திரை திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை மற்றும் புஷ்ப பல்லக்கு, மே, 7ம் தேதி, துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடக்கிறது