Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு பண்டாஞ்சநேயர் கோவில் உண்டியலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மராஜா, வீரபத்திர சுவாமி கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2017
12:04

ஓசூர்: ஓசூர் அடுத்த டி.,கொத்தப்பள்ளி தர்மராஜா சுவாமி மற்றும் வீரபத்திர சுவாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது. ஓசூர் அடுத்த டி.,கொத்தப்பள்ளி கிராமத்தில், பழமையான தர்மராஜா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா மற்றும் மஞ்சு விரட்டு விழா, கடந்த, 10 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, 14ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தர்மராஜா சுவாமி மற்றும் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. 18 ல் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சகரகம், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடந்தது. ஊர் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர், மாலையில் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் இன்று (ஏப்., 20) திரவுபதி அம்மன் அக்னி குண்ட பிரவேசம், பூக்கரகம், வாண வேடிக்கை, சிலம்பாட்டம் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை (ஏப். 21) காலை, 10:00 மணிக்கு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியும், தொடர்ந்து மதியம், 2:00 மணிக்கு தர்மராஜ சுவாமிக்கு தாலாட்டு உற்சவமும் நடக்கிறது. இதேபோல், ஓசூர் அடுத்த குருபரப்பள்ளி, மராட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி ஆகிய, மூன்று கிராமங்களுக்கு நடுவே அமைந்துள்ள வீரபத்திர சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 17 ல் துவங்கியது. நேற்று முன்தினம் மதியம், ஊர் பொதுமக்கள் தேரை தோளில் சுமந்து கொண்டு, குருபரப்பள்ளி, மராட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி ஆகிய, மூன்று கிராமங்களுக்கு சென்றனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அக்னி குண்ட பிரவேசம் நடந்தது. நேற்று பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் ஐப்பசி கிருத்திகையை முன்னிட்டு திரளான ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: வட மாநிலங்களில் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. கார்த்திகை பவுர்ணமியில் தேவ் தீபாவளி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar