பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
11:04
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடந்தன.சிவலோகநாதர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியன்று, கால பைரவருக்கு மாலை 5.00 மணியளவில், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், தயிர், அரிசி மாவு போன்றவைகளால் அபிஷேக பூஜை நடந்தது.
பின், கால பைரவருக்கு, ரோஜா, வடை போன்ற மாலைகள் சாத்தப்பட்டது. பின், சிவலோகநாதர், சிவலோகநாயகி, முருகர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், காலபைரவருக்கு அர்ச்சனை
செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பூசணி, எலுமிச்சை, கார்த்திகை போன்றவைகளில் விளக்கு வைத்து வழிபட்டனர்.