பதிவு செய்த நாள்
26
ஏப்
2017
11:04
ஊத்துக்கோட்டை: பெரியாயி அம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு, மயான கொள்ளை விழா, யாக பூஜை, காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கியது. ஊத்துக்கோட்டை அடுத்த , எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில். ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள இக்கோவிலில், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், சிறப்பு பூஜை நடை பெறும். இங்கு அம்மனை வழிபடச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். சித்திரை மாத அமாவாசை தினத்தை ஒட்டி, நேற்று, மூன்றாம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. ஐந்து நாட்கள் நடை பெற உள்ள இந்நிகழ்ச்சியின் முதலாம் நாளான நேற்று, காலை , 8:00 மணிக்கு, யாக பூஜை, கொடியேற்றம், காப்பு கட்டுதல் ஆகியவற்றுடன் துவங்கியது. மாலை , 4:00 ம ணிக்கு, புறக் கூடை, சக்தி கரகம், தீச்சட்டி எடுத்தல், அலகு போடுதல், அம்மன் வீதிஉலா ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு, 9:00 ம ணிக்கு நிசாசன்னி வதமும் நடந்தது. இரண்டாம் நாளான இன்று, புதன்கிழமை, காலை , 6:30 ம ணிக்கு அம்மனுக்கு நலங்கு வைத்தல், சீர்வரிசை எடுத்தல், காலை 9:00 ம ணிக்கு, மயான கொள்ளை சூறை யிடுதல், வெள்ளாளகண்டி அழித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன. இரவு, 9:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பு, இரவு, 9:30 ம ணிக்கு, கும்ப படையல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபடுவர்.