பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
01:04
திருவள்ளூர் : பெருமாள் கோவில்களில் நேற்று, திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், திருமஞ்சனம் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. இதில், மாலை நேரத்தில், நான்கு மாட வீதிகளில், உற்சவர் வீரராகவர் வீதியுலா வந்து,
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராமானுஜர் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை மூலவருக்கும்,
மாலையில் உற்சவருக்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, சாற்றுமுறை உற்சவம் நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.