பதிவு செய்த நாள்
27
ஏப்
2017
02:04
சென்னை : சைதாப்பேட்டை, காரணீசுவரர் கோவிலின் சித்திரை மாத பெருவிழா, ஏப்., 30ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது, சொர்ணாம்பிகை சமேத காரணீசுவரர் கோவில். 450ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.இக்கோவிலின் சித்திரைப் பெருவிழா, ஏப்.,
30ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ல், அதிகார நந்தி சேவையும், மே 4ல், வெள்ளி ரிஷப வாகன சேவையும் நடக்கிறது. விழாவில் முக்கிய நாளான, மே 5 காலை, 7:45 மணிக்கு, தேர் வடம்பித்தல் விழா நடக்கிறது.
சித்திரை பெருவிழாவின் எட்டாம் நாள் விழாவில், அம்பிகை, திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய நிகழ்ச்சி, அறுபத்து மூவர் திருக்காட்சியும் நடக்கிறது. மே 9ல் திருக்கல்யாணஉற்சவம், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், அதிக எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.