மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு 400 டன் ஏசி வசதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2017 10:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 400 டன் அளவில் ஏசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது: சித்திரை வீதிகளில் நிழற் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான குடிநீர் கிடைக்கும். மே 7 ல் நடக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, வடக்கு ஆடி வீதி திருக்கல்யாண மேடைக்கு அருகில் 300 டன், திருக்கல்யாண மண்டபத்தில் 100 டன் அளவில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. ஆறாயிரம் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கட்டணமில்லா தரிசனம் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படும். 500 ரூபாய் கட்டண அனுமதியில் 2,250 பேர் மேற்கு கோபுரம் வழியாகவும், 200 ரூபாய் கட்டண அனுமதியில் 3,250 பேர் வடக்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாணம், 20 இடங்களில் பெரிய திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.