பதிவு செய்த நாள்
03
மே
2017
11:05
திண்டுக்கல்: பசுவை தெய்வமாககருதுவது, தானம் வழங்குவது குறித்த, 15ம் நுாற்றாண்டு கல்வெட்டு, திண்டுக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடித்தார் : திண்டுக்கல் - பழநி ரோட்டில், முருகபவனம் அருகே, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டை, விஸ்வ நாத தாஸ் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த கல்வெட்டில், பசுவை தெய்வமாகவும், பசுவை தானமாக வழங்குவதையும் காட்சிப்படுத்தி உள்ளனர். பசுக்கள் செழிப்புடன் இருக்கும் நாடு, வளம் உள்ளதாக இருக்கும். நாடு செழிக்க, பசு வழிபாடு முக்கியம் என்றும், லட்சுமியின் அவதாரமாக பசு விளங்குவதையும், இந்த கல்வெட்டு எடுத்துரைக்கிறது. இந்த கல்வெட்டில் மன்னருக்கும், ராணிக்கும் மேலாக, பசுவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கீழே மன்னரும், ராணியும், அதற்கும் கீழே படைத் தளபதியும் உள்ளனர். கப்பம் கட்டும் மன்னர்களும் பசுவை போற்றுவதை போல, மற்றொரு கல்வெட்டு உள்ளது. தினமலர் ஆசிரியர் நுால்கள்இதில் சேவகர்கள் மற்றும் போர் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்த கல்வெட்டை சிலர், குங்கும பொட்டிட்டு, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
கல்வெட்டு ஆர்வலர்விஸ்வநாத தாஸ் கூறியதாவது: கல்வெட்டுகள், வட்டெழுத்துகள் குறித்து, தினமலர் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நுால்களை படித்து, பல தகவல்களை தெரிந்து கொண்டேன். 15ம் நுாற்றாண்டு கல்வெட்டு இங்கு இருப்பதை கண்டுபிடித்தேன். இந்த கல்வெட்டில், பசு தானம், பசுவை மக்கள் தெய்வமாக வழிபடுவது பற்றி விளக்கப்பட்டுள்ளது.கல்வெட்டில் உள்ள உருவங்களில் உள்ளோரின் தலைமுடி, கொண்டை அமைப்பை காணும் போது, அவர்கள், நாயக்கர் மன்னர்களாக இருக்கலாம். அவர்கள், பசுவை வழிபடுவதற்காக இந்த கல்வெட்டை நிறுவியிருக்கலாம். இது குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.