பதிவு செய்த நாள்
06
மே
2017
12:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்றிரவு 11:00 மணி முதல் சித்திரை, ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தவோ அனுமதி கிடையாது. அனுமதி சீட்டுடன் வருபவர்கள், மே7 காலை6:00 மணி முதல் பின்வரும் இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மஞ்சள் நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள், வாகனங்களை மேல ஆவணி மூல வீதியில் நிறுத்தவேண்டும். அவர்கள், ‘ஓல்டு’ டி.வி. எஸ்., வடக்கு, மேல மாசி வீதிகள் சந்திப்பு, வடுககாவல் கூடத்தெரு, தானப்பமுதலி தெரு, மீனாட்சி காபி பார்வழியாகநிறுத்தத்தை அடையலாம். பண்டு ஆபீஸ், ஜான்சி ராணி பூங்கா, நேதாஜி ரோடு, ஆரியபவன் சந்திப்பு, டி.பி.கே., ரோடு வழியாக வெளியேற வேண்டும்.
ரோஸ் நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள் வாகனங்களை வடக்கு ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். அவர்கள், மீனாட்சி காபி பார் வழியாகவோ, யானைக்கல், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல், இந்தியன் வங்கி வழியாகவோ நிறுத்தத்தை அடையலாம். தளவாய்தெரு, வக்கீல் புது தெரு வழியாக வெளியேற வேண்டும். நீல நிற அனுமதி சீட்டு உள்ளவர்கள், தெற்கு ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அவர்கள், கட்டபொம்மன் சிலை, நேதாஜி ரோடு, ஆரியபவன் சந்திப்பு, ஜான்சி ராணி பார்க் வழியாகவோ, விளக்குத்துாண், தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, ஆரிய பவன் சந்திப்பு, ஜான்சி ராணி பார்க் வழியாகவோ நிறுத்தத்தை அடையலாம். ஜடாமுனி கோயில் சந்திப்பு, வெங்கலக்கடை தெரு, விளக்குத்துாண் வழியாக வெளியேற வேண்டும். மே7, காலை5:00 மணி முதல், கார்அனுமதி சீட்டு இல்லாதவர்கள் மற்றும் ‘டூ வீலரில்’ வருபவர்கள் தங்கள் வாகனங்களை மாசி வீதிகள், திருப்பரங்குன்றம் ரோடு, மதுரைக்கல்லுாரி மைதானம், கீழவெளி வீதி புனிதமேரி பள்ளி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தலாம்.