Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சொக்கர் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனை மகிழ்விக்கும் கோலாட்டம் ஆடும்  சிறுமிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் புறப்படுகிறார்
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் புறப்படுகிறார்

பதிவு செய்த நாள்

08 மே
2017
10:05

மதுரை: இன்று கள்ளழகர் புறப்படுகிறார் பக்தர்களை நேரில் சந்தித்து ஆசி வழங்க இன்று மாலை அழகர்கோவிலில் இருந்து  மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் மே 10ம் தேதி மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவில் சித்திரை திருவிழா மே 6ம் தேதி துவங்கியது.
முதல் 2 நாட்களும் தோளுக்கினியான் அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சித்திரை திருவிழாவின் முக்கியமான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 10 ல் நடக்கிறது. இதற்காக இன்று மாலை 5:20 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.

கோயில் முன் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழியானவுடன் கொம்பு சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் ராஜ கோபுரத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் 18ம் படி
கருப்பண்ண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7:00 மணிக்கு மேள, தாளம் முழங்க புறப்படுகிறார்.

அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் மண்டகபடிகளில் எழுந்தருளி, நாளை காலை 6:00 மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து
புதூரிலும், மாலையில் அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது.

நள்ளிரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடையும் கள்ளழகருக்கு திருமஞ்சணம் நடக்கிறது.அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு தங்க குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர் காலை 6:15 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் ஆற்றில் இறங்குகிறார். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கள்ளழகர் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar