Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் ஒரு அழகர் கோவில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா துவக்கம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 மே
2017
12:05

திருவாடானை; திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேரோட்டம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயில் சித்திரை திருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை துவங்கியது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருடன் காலை 8:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 11 மணிக்கு தேர் கோயில் முன்பு நிறுத்தப்பட்டது. பின்பு மாலை 3:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி, 4:00 மணிக்கு தேர்நிலைக்கு சென்றடைந்தது. பின்பு தேர்தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர்

சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரசு போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் பிரம்மோற்சவ விழாவையொட்டி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் சித்திரைத் தேரோட்டம் பக்தர்களின் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க நடந்தது.

பரமக்குடி ஈஸ்வரன் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்களில் கடந்த பத்து நாட்களாக சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசாலாட்சி சமேத சந்திரசேகரர் திருக்கல்யாணம் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு இரண்டு திருக்கோயில்களிலும் விநாயகர், முருகன் தேர்கள் முன் செல்ல சுவாமி பிரியாவிடையுடனும், அம்பாள் தேர் என தனித்தனியாக வலம் வந்தனர். தேரினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க பக்திப் பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் மதியம் 12 மணியளவில் நிலையை அடைந்தது. இன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar