பதிவு செய்த நாள்
09
மே
2017
02:05
ஆத்தூர்: ஆத்தூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது. ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷத்தையொட்டி, நேற்று,
காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி சிலைக்கு, பால், தயிர், வெண்ணெய், மஞ்சள், தேன் உள்பட பல்வேறு அபிஷக பூஜை நடந்தது. மேலும், மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை,
5:00 மணிக்கு, காயநிர்மலேஸ்வரர் மற்றும் நந்தி பகவான், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் கைலாசநாதர், பேளூர் தான் தோன்றீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வெள்ளை விநாயகர் கோவில் சிவன், ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆகிய கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது.