பதிவு செய்த நாள்
09
மே
2017
02:05
சேலம்: சேலம், வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு பெருமாள், தேவியர்களுடன் சிறப்பு
அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 14 காலை, 7:00 மணிக்கு தேரோட்டம், 16 காலை, 9:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், மாலை, 6:00 மணிக்கு புண்யகோடி விமான சேவை, 17
மாலை, 6:00 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்ற விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.