திருவாரூர் மாவட்டம் மன்னர்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில், திருவரங்கத்துக்கு அடுத்த படியாக 18 நாள்கள் பிரம்மோற்ஸவமும், 12 நாள் விடையாற்றியும் காணும் பெருமைக்குரியது. கோப்பிரளயர், கோபிலர் எனும் முனிவர்களின் வேண்டுகோளின்படி, இன்றளவும் பக்தர்களைத் தாமே தேடிச் சென்று, ராஜகோபலஸ்வாமி அருள் பாலித்து வருகிறார் என்பது ஐதீகம். பெரும் புண்ணியம் தரும், இந்தத் திருத்தலத்தின பிரசித்திப் பெற்ற வெண்ணெய்த் தாழி உற்சவத்தையே இங்கே நீங்கள் தரிசிக்கிறீர்கள்!