கடவுளின் திருவடியைப் பற்றிக் கொள்வது சரணாகதி. நீ தான் எனக்கு கதி என்று கெட்டியாக இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அவதாரத்திலும் இறைவனுக்கு எத்தனையோ முகங்கள், கைகள், ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், அவருக்கு பாதங்கள் (கால்கள்) என்னவோ இரண்டு மட்டும் தான். ஏனென்றால், அவரை வணங்கும் நமக்கு இரு கைகள் மட்டுமே. சரணாகதி அடைய வரும் அன்பர்கள் தன் இரு கைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற கருணையோடு இருதிருவடிகளைத் தாங்கி நிற்கிறார். இதனையே, அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று இறைவனின் திருவடியின் பெருமையை குறிப்பிடுவது வழக்கம்.