ராவணனின் மகன் இந்திரஜித். அவன் பிறக்கும் போது வானில் கருமேகம் கூடி முழங்குவது போல கர்ஜித்ததால் மேகநாதன் என்று பெயர் சூட்டினான் ராவணன். சிவனை நோக்கி தவம் செய்து, வலிமை பெற்றான் இந்திரஜித். எனவே இவனை மாயாவி என்பர். இந்திரனை மாயையால் கட்டி அவனுடைய பிரம்மா ஸ்திரத்தை பறித்துக் கொண்டதால், இந்திரனை வென்றவன் என்னும் பொருளில் இந்திரஜித் என்ற பெயர் உண்டானது. அனுமன் இலங்கை வந்தபோது, பிரம்மாஸ்திரத்தால் அவரைக் கட்டி ராவணன் முன் நிறுத்தியவன். லட்சுமணனுடன் போரிட்ட போது இந்திரஜித்தின் தேர் அழிந்து உயிர் விட்டான். இவனுடைய உடலை ராவணன் எரிக்காமல் தைலத்தில் இட்டுப் பாதுகாத்தான்.