Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனுபுரீஸ்வரர் கோவில் புதிய தேர் ... அரியலூர் அருகே தேர் கவிழ்ந்து 4 பேர் காயம் அரியலூர் அருகே தேர் கவிழ்ந்து 4 பேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்க விஜயராகவர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2017
12:05

திருத்தணி: விஜயராகவ பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

Default Image
Next News

திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான விஜயராகவ பெருமாள், விஜயலட்சுமி தாயார் ஆகிய கோவில், 4.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், ஏழு யாக சாலைகள்,108 கலசங்கள் அமைக்கப்பட்டன. நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூபம், கும்ப திருவாராதனம் மஹா பூர்ணாஹூதியும், காலை, 6:30 மணிக்கு அரக்கோணம் எம்.பி., அரி, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி,முன்னாள் நகர சேர்மன் சவுந்தர்ராஜன் ஆகியோர் கலசங்கள் ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, காலை, 7:10 மணிக்கு, விஜயராகவ பெருமாள், விஜயலட்சுமி தாயார் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி மேல் அமை க்கப்பட்ட கோபுரத்திற்கு கலச நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். மேலும், கலச நீர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளித்தனர். பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9:45 மணிக்கு, உற்சவர் விஜயராகவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேக விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றிஉள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

300 ஆண்டுகளுக்கு பின் திருக்கல்யாணம்:
விஜயராகவ பெருமாள் கோவில் புதியதாக புனரமைக்கப்பட்ட பின், 50 ஆண்டுகளில், மூன்று முறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று, நான்காவது முறையாக கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. ஆனால், இம்முறை நடந்த கும்பாபிஷேகத்தின் போது, திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்று காலை நடந்தது. 300 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்துள்ளது என, கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar