புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 180வது குரு பூஜை விழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில், 180வது குரு பூஜை விழா, 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. குருபூஜை தினமான நேற்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, கலசப்புறப்பாடாகி, 10:00 மணிக்கு கலசாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன் குருக்கள் தேவசேனாதிபதி ஆகியோர் செய்திருந்தனர்.