பதிவு செய்த நாள்
30
மே
2017
01:05
குளித்தலை: மேலவெளியூர் குள்ளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்சாயத்து, மேலவெளியூர் குள்ளாயி அம்மன்,
மதுரைவீரன், கருப்பண்ணசாமி கோவில் திருப்பணி முடிந்து, கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பால்குட, தீர்த்தக்
குடங்கள் எடுத்து வரப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டன. தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக, பல்வேறு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், நேற்று காலை, 9:30 மணியளவில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு, புனிதநீர் ஊற்றினர். இவ்விழாவில், மேலவெளியூர், கீழவெளியூர், காக்காயம்பட்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
பிச்சாண்டவர் கோவில் ஸ்தானிகர் அருண் குருக்கள் தலைமையிலான குழுவினர், கும்பாபிஷேகத்தை நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.