சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2017 12:06
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஹரிகரன், உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் வில்வமூர்த்தி மற்றும் பரம்பரை அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டது. கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் கணக்கிட்டனர். ரொக்கமாக ரூ.40 லட்சத்து 25 ஆயிரத்தி 187 , 131 கிராம் தங்கம், 1751 வெள்ளி கிராம் காணிக்கையாக கிடைத்தது. கடந்த ஏப்ரல் 26ல் உண்டியல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.