செம்பட்டி: ஆதிலட்சுமிபுரத்தில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு, வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.